மாணவர்களின்
மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு
முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக
அரசுத்
தேர்வுத்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
ரகசிய பார்கோடு எண்களின் மூலம் மாணவர்களுக்குரிய மதிப்பெண்
அந்தந்த
மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும்
பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும்
தெரிவித்தன.
தமிழகத்தில்
மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம்
தேதி வரை பிளஸ் 2 தேர்வு
நடைபெற்றன. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம்
மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.
மாணவர்கள்
தங்களது பிறந்த தேதி, பதிவு
எண்ணைப் பதிவு செய்து தேர்வு
முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment