Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 11, 2014

    113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
    பிளஸ் 2 தேர்வு முடிவு கள் வெள்ளியன்று வெளி யானது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் 90.6 சதவீதம் ஆகும்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகம். 3,882 மாணவ மாணவிகள் கணக்கில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பிய லில் 2,710
    பேரும், வேதியலில் 1,693 பேரும் 200க்கு 200 எடுத்துள்ளனர்.இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் அதிகரித்து உள் ளது. கடந்த ஆண்டு 79 சத வீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 84.1 சத வீதமாக உயர்ந்து உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 2,403 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 113 அரசு பள்ளிகள் 100 சத விதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    இது பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ராமேஸ்வரமுருகன் கூறும்போது, இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதி காரிகள் அடிக்கடி ஆய்வு செய்து அரசு பள்ளிகளை யும் மாணவ மாணவிகளை யும் ஊக்குவித்தனர். படிப்பில் பின்தங்கிய மாணவ- மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதான் தேர்ச்சி விகிதம் அதி கரிப்புக்கு காரணம் என்றார்.

    1 comment:

    Anonymous said...

    அது சரிதான்...அப்ப கன்னியாக்குமரி மாவட்டத்தில் 2 தலைமையாசிரியர்கள்,12 ஆசிரியர்கள் மீது தேர்ச்சி சதவீதம் குறைந்தததற்கு நடவடிக்கை ஏன்?
    காரணம்,
    குமரி மாவட்ட அதிகாரிகள் அப்பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்கு போகலையோ?