Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 10, 2014

    1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

    சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது . ஆர்.டி.இ., சட்டம் மற்றும் அதன் கீழ், மாணவர்
    சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில், "அரசு நிதி உதவி பெறும் மற்றும் நிதி உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களை, ஆர்.டி.இ., சட்டம், கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில், அரசு உதவி பெறும், 499 சிறுபான்மை பள்ளிகள், உதவி பெறாத, 609 சிறுபான்மை பள்ளிகள் என, மொத்தம், 1,108 பள்ளிகளுக்கு, ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு, ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது என்பதால், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மொத்த இடங்களின் எண்ணிக்கை, கணிசமாக சரியும். சுப்ரீம்கோர்ட் உத்தரவை பின்பற்றும் பள்ளிகள் எவை என்பதை அந்தந்தப் பகுதி பெற்றோர் கண்டறிந்து, தங்கள் குழந்தைகளை சேர்க்க இந்த ஆண்டில் போதுமான கால அவகாசம் இனி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

    No comments: