Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 22, 2014

    10ம் வகுப்பு மாணவரை தேர்வு எழுத விடாத பள்ளிக்கு அபராதம்

    தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்பவர் அழகுவேல். இவரது மகன் பிரவின் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர்.
    தனித்தேர்வு எழுதுவதற்கும் தகுந்த பள்ளி சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதையடுத்து மாணவர் பிரவின் பள்ளியின் மீது தேனி நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் இழப்பீடாக னீ1 லட்சம் அபராதமும், உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து தொகை கொடுக்கும் வரையில் 9 சதவீதம் வட்டியும் சேர்த்து தரவேண்டும். மேலும் செலவு தொகையாக னீ5 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

    1 comment:

    Anonymous said...

    மாணவன் ஒழுக்கமானவனா?பள்ளிக்கு சரியாக வந்தானா? அவன் எப்படி இருந்தாலும் அவனுக்குதான் சாதகம்!