ஆறு மாதங்களாக காலியாக உள்ள, அண்ணா பல்கலை துணைவேந்தர் பணியிடத்தை நிரப்பும் பணிகளை, உயர் கல்வித் துறை முடுக்கி விட்டுள்ளது. இப்பதவியை பெற, முன்னாள் துணைவேந்தர் உட்பட, பலர் போட்டியில் உள்ளனர். அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், மே மாதம் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை நியமிக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆறு மாதங்களாக துணைவேந்தர் இல்லாததால், பல பணிகள் முடங்கியுள்ளன. அதனால், தேடல் குழு அமைக்கும் பணிகளை, உயர் கல்வித் துறை முடுக்கி விட்டுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன், அரசு தரப்பில், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹேமந்த் குமார் சின்கா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
கவர்னர் தரப்பு பிரதிநிதியை நியமிப்பதற்கான, ’பைல்’ அவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ஒப்புதல், இரு தினங்களில் அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பல்கலை துணைவேந்தர் பதவிக்கான போட்டியில், அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி சிவநேசன், அண்ணா பல்கலை பேராசிரியை கவுரி, கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் நாராயணசாமி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்கலையின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் ராஜாராமும், துணைவேந்தர் பதவிக்கான தேர்வு பட்டியலில் மீண்டும், இடம் பெற்றுள்ளதாக, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment