’ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து, புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என, கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் ஏ.இ.இ.ஓ., அலுவலகம் முன் நடந்தது. வட்டாரத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் முருக செல்வராஜன், துவக்கி வைத்தார். பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, தமிழக அரசு அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்டு, பொதுக்கருத்தை மத்திய அரசுக்கு பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து, புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment