Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    மாணவரை அடித்ததாக புகார்; உடற்கல்வி ஆசிரியர் ’சஸ்பெண்ட்’

    கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் பொற்செழியன் மகன் பிரதாப், 15; கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி, பள்ளி முடிந்து, பிரதாப் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த பிரதாப், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் தாய் பிரவீணாவிடம், பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டதாகவும், அப்போது, உடற்கல்வி ஆசிரியர் ஏன் சீருடை அணியவில்லை எனக் கேட்டு, தலையில் அடித்ததால் வலிப்பதாகவும் பிரதாப் கூறியுள்ளார். 


    கடலுார் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பிரதாப்பை அனுமதித்து பரிசோதனை செய்ததில், வலது காதில் செவித் திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். 

    அதிர்ச்சியடைந்த பிரவீணா, தன் மகனை அடித்த உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலுார் போலீசில் நேற்று, புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி நேரில் சென்று, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.


    விசாரணைக்கு பின், மாணவரை அடித்ததாக கூறப்படும் உடற்கல்வி ஆசிரியர் கமால் பாஷாவை, ’சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். 

    No comments: