Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் 80 லட்சம் குடும்பங்கள் 'ரெடி'

    அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், தற்போதுள்ள காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அக்கருவியில், ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின், 'ஆதார்' அட்டை விபரம் பதியப்படுகிறது.


    அதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இப்பணியை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், அக்டோபரில் துவங்கி, டிச., 31க்குள், அனைத்து மாவட்ட மக்களுக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. பலர், ஆதார் விபரம் தராததால், இப்பணி தாமதமானது.

    திட்டமிட்டபடி
    இந்நிலையில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை வழங்கிய குடும்பங்களுக்கு மட்டும், விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர் தான், ஆதார் விபரம் தராமல் உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி,திட்டமிட்டபடி துவங்கவில்லை. தற்போது, 80 லட்சம் குடும்பங்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களையும் வழங்கியுள்ளன.
    அரசு ஒப்புதல் அளித்தால், முதல் கட்டமாக, அவர்களுக்கு, டிச., துவக்கத்தில் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும். பின், ஆதார் விபரம் வழங்குவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    எத்தனை பேர்?

    தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுகளில், 7.87 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 4.96 கோடி பேர் மட்டுமே ஆதார் விபரம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள, 2.91 கோடி பேர், விபரம் தரவில்லை.

    No comments: