Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 2, 2016

    பள்ளிக்கே செல்லாத 6.54 கோடி இந்தியர்கள்: கணக்கெடுப்பில் தகவல்

    இந்தியாவில் 5 முதல் 19 வயதுடையவர்களில் 6.54 கோடி பேர் பள்ளிக்கே செல்லவில்லை என்பது கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் மூலம் தெரியவந்துள்ளது.


    இதுதொடர்பான விவரம் வருமாறு: 2011-ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 முதல் 19 வயது உள்ளோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 38 கோடியாகும். இதில், 26.98 கோடி பேர் கல்வி பயின்று வருகின்றனர். இது, 71 சதவீதம் ஆகும். ஆனால், 6.54 கோடி பேர் (17.2 சதவீதம்) பள்ளிக்கே செல்லவில்லை. 4.49 கோடி பேர், அதாவது 4.49 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.
    5 முதல் 19 வயதுடைய 38 கோடி பேரில், சுமார் 65.7 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவார். இவர்களில், 17 லட்சம் பேர் (26 சதவீதம்) பள்ளிகளுக்கு செல்லாதவர்கள். 8 லட்சம் பேர் (12 சதவீதம்) பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். மீதமுள்ள 40 லட்சம் பேர் கல்வி கற்று வருகின்றனர். கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளில் 22.8 லட்சம் பேர் ஆண்கள். 17.4 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.
    கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 19 வயது உடையவர்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 65.3 லட்சமாக இருந்தது. இதில், கல்வி பயின்றவர்கள் 33 லட்சம் பேராக இருந்தனர். 2001 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகளில் கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

    No comments: