Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 10, 2016

    பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

    பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.


    பல்கலை மானியக்குழு சார்பில், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி திட்டத்தில், ஆய்வுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. அதன் படி, பாரதியார் பல்கலை தமிழ்த்துறைக்கு, கொங்குநாட்டு வரலாறுகளை ஆவணப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக, 2009-13 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, 22.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.

    தற்போது, இரண்டாம் கட்டமாக, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, கொங்கு பகுதிகளுக்கான தாலாட்டு, ஒப்பாரி, கதை பாட்டு, நெடுபாட்டு, கூத்துக்கள், நாட்டுப்புற மருத்துவ முறை, திருமண நடைமுறை, விளையாட்டுகள், நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தவேண்டும். இரண்டாம் கட்ட ஆய்வுக்கு, 2019ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்த் துறைத்தலைவர் ஜெயா கூறுகையில், ”மேற்கத்திய நாடுகளில், அனைத்தும் ஆவணமாக பதிவு செய்யப்படும் பழக்கம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆவணப்படுத்தும் வழக்கம் அதிகம் இல்லை. இதனால், இலக்கிய வரலாறுகள் படைப்பதில் சிரமம் எழுகிறது. 

    ஒவ்வொரு ஆவணமும் ஓர் பெரிய இலக்கிய வரலாற்றின் பகுதி. கொங்கு பகுதிகளுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. நாட்டு மருத்துவம், விவசாயம் என, பழங்கால முறைகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்,” என்றார்.

    No comments: