Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 10, 2016

    ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு

    புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
    இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பதற்றமடைந்த மக்கள், இந்த நோட்டுக்களை மாற்றவும், செலவுக்காக, 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்கவும் நேற்று முன்தினம், ஏ.டி.எம்.,களில் முண்டியடித்தனர்.நேற்றும், இன்றும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி.ஐ., நிர்வாக மேலாளர் ரஜ்னீஷ் குமார் கூறியதாவது: பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. தேவையான அளவுக்கு, 100 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கையில் இருப்பு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, எஸ்.பி.ஐ., குழுமத்தின், 17 ஆயிரம் கிளைகள், 55 ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள், 7,000 பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், செல்லாத, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    மூன்றாவது முறை : இதற்கு முன், இரண்டு முறை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில், 1946ல் முதல் முறையாக இவ்வாறு அறிவிக்கப்பட்டது. கடந்த, 1978ல், பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது, 1,000; 5,000; 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டன.தற்போது, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: