Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 28, 2016

    தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை

    "தேர்தல் பணியில், எந்த "கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம் கற்றுத்தருவர். மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.


    வழக்கமாக, தேர்தல் வேலைகளில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இம்முறை, சிறப்பு ஆசிரியர்கள் சிலருக்கும், தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தேர்தல் பணி நியமன உத்தரவு வழங்கும்போது, சிறப்பு ஆசிரியர் என குறிப் பிடவில்லை. இதனால், தங்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்; அரசு தங்களை எந்த "கிரேடில்' வைத்துள்ளது என தெரியாமல், குழப்பம் அடைந்துள்ளனர்.

    கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
    பணி உத்தரவு வழங்கும்போது, ஓவிய ஆசிரியர் என, குறிப்பிடுகின்றனர். தேர்தல் பணியில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் என்ற முறையில் இணைத்துள்ளனரா? அல்லது அரசு பணியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

    எங்களில் பலரும், மத்திய அரசின் நிதி, 65 சதவீதம்; மாநில அரசின் நிதி, 45 சதவீதம் வாயிலாக, சம்பளம் பெறுகிறோம். பணி உத்தரவுக்கான விண்ணப் பம் வழங்கும்போது, மாநில அரசு ஊழியரா, மத்திய அரசு ஊழியரா என கேள்வி இடம் பெறவில்லை. எனவே, தேர்தல் பணிக்கு, நாங்கள், எந்த "கிரேடு' அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: