பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி 15 மாவட்டங்களில் துவங்கி உள்ளது.படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ப்பதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.இதற்காக பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து மீட்கும் பணி நடக்கிறது.
No comments:
Post a Comment