Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 16, 2016

    இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம்!

    இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.


    ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் திங்கட்கிழமையன்று 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஏப்ரல் மாதத்தில் இந்த அளவு வெயில் அந்நகரத்தில் இருந்தது இதுவே முதல் முறையாகும்.பருவமழைக்கு முன்பாக இந்தியா முழுவதும் நல்ல வெயில் இருப்பது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான அளவில் வெயில் அடித்துவருகிறது. அதுவும் குறித்த காலத்திற்கு முன்பாகவே கடும் வெப்பம் நிலவுகிறது.

    வட இந்தியாவின் பெரும் பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பம் நிலவிவருகிறது. இந்தியாவின் உட்புறப் பகுதிகளிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக கொல்கத்தா, புவனேஸ்வர் ஆகிய நகரங்கள்கூட வெப்பத்தில் தகிக்கின்றன. வழக்கமாக வங்கக் கடலில் இருந்து வீசும் கடல் காற்றின் காரணமாக இந்நகரங்களில் வெப்பம் சற்று தணிந்திருப்பது வழக்கம்.

    2015ல் நிலவிய எல் நினோவின் காரணமாக, இந்தியாவின் உள் பகுதிகளில் பருவமழை குறைவாகவே பெய்தது. மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையில் பாதிக்கும் சற்று அதிகமாக மட்டுமே மழை பெய்தது.

    விரைவிலேயே மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் வெப்பநிலை குறையுமென தெரிகிறது. இருந்தபோதும், கோடை காலத்தின் மிக வெப்பமான மாதங்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன. ஜூன் மாதத்தின் மத்தியில் பருவமழை துவங்கிய பிறகுதான் இந்த வெப்பத்திலிருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.

    No comments: