Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 11, 2015

    சமூகநலத்துறை இயக்குனரை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

    சமூகநலத்துறை இயக்குனரை கண்டித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் மையங்களில் 1.10 லட்சம் ஊழியர்கள் சத்துணவு துறையில் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமைப்பாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
    கிராமப்புறங்களில் ஒரே அமைப்பாளர்கள் இரண்டு முதல் மூன்று மையங்களை கவனித்து வருகின்றனர்.
    கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை காலவரையற்ற உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுவரை அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சத்துணவு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்காக போராடும் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் மீது சமூகநலத்துறை இயக்குனர் சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    No comments: