Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 22, 2015

    ஒவ்வொரு பக்கமும் 25 வரிகள் எழுத வேண்டும்.மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

    பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவற்றை, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
    மாணவர்கள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட வேண்டும், விடைத்தாளின் ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இரண்டு பக்கங்களிலும் எழுத வேண்டும். செய்முறைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியிலேயே இருக்க வேண்டும்; வினா எண்ணைத் தவறாமல் எழுத வேண்டும். இரு விடைகளுக்கு இடையில், இடைவெளி விட்டு எழுத வேண்டும்; வினாத்தாளின் வரிசை யை, மதிப்பெண்கள் பக்கத்தில் குறிக்க வேண்டும்; விடைத்தாளில் விடைகளை கறுப்பு அல்லது நீல மை பேனாவால் எழுத வேண்டும். தேர்வு முடியும் போது, விடைத்தாளில் எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றில் குறுக்குக் கோடு போட வேண்டும்; இதேபோல் எதை செய்யக்கூடாது என்றும் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

    பெயர் எழுதக்கூடாது: மேலும், வினாத்தாளில் எந்தக் குறியீடும் இடக்கூடாது; விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது; விடைத்தாளின் எந்தப் பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது. வண்ண பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது; விடைத்தாளில் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது; விடைத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு மாணவர்களை அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கும், தேர்வு மையங்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், தேர்வுத்துறை இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    No comments: