Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 28, 2015

    மத்திய பட்ஜெட்- 2015

    -மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

    -மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு


    -தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு


    -சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு

    -செல்வந்த வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது

    -ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம் பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்

    -மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை

    -ரூ1 லட்சத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்

    -மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக இருக்கும்

    -இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம் கோடியாக இருக்கும்

    -திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம் சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி

    -ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க சட்டம்

    -வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

    -வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்

    -கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை

    -கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில் திருத்தம்

    -வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள் சிறை

    -வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை

    -வெளிநாட்டில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை

    -வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300 சதவீதம் அபராதம்

    -இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

    -தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்: அருண் ஜேட்லி

    -கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

    -பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு

    -வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

    -கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்

    -பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727 கோடி ஒதுக்கீடு

    -கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி

    -சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு

    -பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அருண் ஜேட்லி

    -முதுகுவலி பிரச்சினை: பட்ஜெட் உரையை அமர்ந்து வாசித்தார் அருண் ஜெட்லி

    -தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்

    -டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்

    -பட்ஜெட் உரையை அமர்ந்து வாசிக்கிறார் நிதியமைச்சர்அருண் ஜெட்லி

    -சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கோரிக்கையை ஏற்றார்

    -தேவையெனில் அமர்ந்தே பட்ஜெட் படியுங்கள் : சுமித்ரா மகாஜன்

    -கடந்தமுறை பட்ஜெட் உரை வாசிக்கும் போது சிறிது ஓய்வு எடுத்தார் ஜெட்லி

    -இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்

    -அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியிடப்படும்

    -தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்

    -மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75 கோடி ஒதுக்கீடு

    -நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம் கோடி ஒதுக்கீடு

    -150 நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள அனுமதி

    - இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த வசதி உள்ளது

    -100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    -அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்படும்

    -தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

    -கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி

    -தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    -நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 340 பில்லியனாக உள்ளது

    -புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000 கோடி நிதி

    -சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி

    -4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5 பெரும் மின் திட்டங்கள்

    -ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட வரியில்லா பத்திரங்கள்

    -பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் இன இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்

    -உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    -சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்

    -முதியோர் பென்சன் திட்டம் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்

    -இதற்கான நிதி பிஎப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்

    -உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம் கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு

    -நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

    -ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

    -முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்

    -தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை

    -நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

    -ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

    -முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.

    3 comments:

    anitha said...

    நள்ளிரவு முதல் பெட்ரோல்.3.50 டீசல் 3.05தும் உயர்த்தப்பட்டுள்ளது.அருமையான பட்ஜெட்.!......!!!!

    anitha said...

    நள்ளிரவு முதல் பெட்ரோல்.3.50 டீசல் 3.05தும் உயர்த்தப்பட்டுள்ளது.அருமையான பட்ஜெட்.!......!!!!

    Unknown said...
    This comment has been removed by the author.