Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 23, 2015

    மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை

    பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன். நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம் எடுக்கவில்லை. என்னுடைய கையெழுத்தும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.
    தேர்வு மோசமாக எழுதிவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே மோசமாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. தேர்வுகளை மிகவும் சகஜமாக அணுகுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
    தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
    படி படி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும்.
    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    No comments: