Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 28, 2015

    டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

    தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து தேர்ச்சி பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது.
    இதை தவிர்க்க பிப்ரவரிக்குள் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு வெளியிட வேண்டும். தற்போது பிளஸ் 2 தேர்வு துவங்க உள்ள நிலையில் தற்போது 40க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன.
    இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    அரசு உத்தரவுப்படி டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் வயது அடிப்படையில் சிலருக்கு விலக்கு அளித்து டி.ஐ., தேர்வு தேர்ச்சி பெறாதவர்களையும் பதவி உயர்வு 'பேனலில்' இணைத்து அனுப்பினர். பல மாவட்டங்களில் இவ்வாறு தேர்ச்சி பெற்றவர், பெறாதவர் என இரண்டு வகை பட்டியல் அனுப்பப்படுகின்றன. இதை பரிசீலிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    No comments: