Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 22, 2015

    தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

    அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.

    தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியே மருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில் உள்ளது.
    இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் 
    துவங்க உள்ள நிலையில், தேர்வு பயம் போக்க, மனநல ஆலோசனை பெற, '104' உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அரசு அறிவித்து உள்ளது. தற்போது, மாணவர்கள் இந்த மையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நாளில், 650 மாணவர்கள், தேர்வு பயம் போக்க ஆலோசனை பெற்றுள்ளனர்.சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபு தாஸ் கூறியதாவது: தேர்வு நேரம் நெருங்கு வதால், பல மாணவர்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு, '104' உதவி மையம் நல்ல தீர்வாக உள்ளது. சராசரியாக, தினமும்,
    650 மாணவர்கள் ஆலோசனை பெறுகின்றனர். நேற்று முன்தினம், அபுதாபியில் இருந்து டாக்டர் ஒருவர், பிளஸ் 2 தேர்வு எழுதும் தன் மகனுக்கு, ஆலோசனை கொடுக்கும் படி அழைத்தார். மாணவர்கள் எந்த நேரத்திலும், இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: