Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 24, 2015

    ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ‘சி-டெட்’ தேர்வு

    மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, ’சி - டெட்’ தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

    மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, ’சி - டெட்’ எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வை, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என, ஆண்டுக்கு இருமுறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது.
    இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு அறிவிப்பு, டிசம்பரில் வெளியானது. நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில், முதல் தாள், இடைநிலை ஆசிரியர்களுக்கும்; இரண்டாம் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இரண்டு பயிற்சிகளையும் முடித்தவர்கள், இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.
    நேற்று, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட, 988 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில், ஆறு; மதுரை, கோவை உட்பட, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, முதல் தாள்; பிற்பகல், 2:00 முதல், 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும், 3,000 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் உத்தேச விடை பட்டியல், அடுத்த வாரம் வெளியாகும். இறுதி முடிவுகள், ஏப்., 1ம் தேதி வெளியிடப்படும் என, தெரிகிறது.

    No comments: