Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 18, 2016

    கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு மரம் நாடு விழா நடைபெற்றது.பள்ளியின் உள்ளேயும் ,வெளியிலும் நல்ல நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் செல்வம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் மரங்களை நட்டனர்.மரங்களை வெளியில் நட்டத்துடன் அதனை பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளை செய்தோம்.காரைக்குடி சென்று கம்பி வலை வாங்கி வந்து அதனை ஆடு,மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக காப்பற்றுவதற்காக முள்  செடிகளை சுற்றி நட்டு பாதுகாத்தோம்.

                                 
    அவை நன்றாக வளருவதற்காக தினசரி தண்ணீர் ஊற்றினோம். கடுமையான வெயில் இருந்தும் கூட மரங்கள் சிறிது  வளர்ந்துவிட்ட நிலையில்  அவை பள்ளியின் வெளியில் இருப்பதால் அவற்றை மேலும் பாதுகாப்பாக காப்பற்றவும், பள்ளி கோடை விடுமுறை நாட்களிகளிலும் ஒரு ஆள் நியமித்து தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அதனை நல்ல முறையில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறோம்.கோடை வெயிலிலும் எப்படி மரங்கள் சந்தோசமாக வளர்ந்து வருகின்றன என்று பாருங்கள்.

    No comments: