Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 27, 2016

    குழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி

    அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள், 92 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் படித்த மாணவர் கவின், 10ம் வகுப்பு தேர்வில், 476 மதிப்பெண் பெற்று, சாதித்து உள்ளார். 


    தமிழகத்தில், குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டோருக்காக, 15 மாவட்டங்களில், சிறப்பு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படித்த, 464 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்; இவர்களில், 429 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகள், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    விசைத்தறி தொழிலில் இருந்து மீட்கப்பட்ட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவின், 476 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். 

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவராம லட்சுமி, 470 மதிப்பெண்; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, 469 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர். 

    இவர்கள் முறையே, பீடி சுற்றும் தொழில், தீப்பெட்டி தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இது தவிர, விசைத்தறியில் இருந்து மீட்கப்பட்ட, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, பார்வையற்ற மாணவர் தேவராஜன், 323 மதிப்பெண் பெற்று உள்ளார்.

    No comments: