Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 27, 2016

    2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரேஷ் பிரபு

    இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும். இதற்கான பணிகள் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு முறையாக நடந்து வருகிறது. இத்திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும்.


    இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை-ஆமதாபாத் இடையே 508 கி.மீ., நீளத்தில் அமையவுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் அமையவுள்ள இந்த புல்லட் ரயில், குறிப்பிட்ட தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையும். இதன் திட்டமதிப்பு ரூ.97,636 கோடி. மொத்த மதிப்பில் 81 சதவீதத்தை ஜப்பான் லோனாக வழங்கவுள்ளது.

    மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில், கடலுக்கடியில் 21 கி.மீ., நீளத்திற்கு சுரங்க ரயில் பாதையும் அமையவுள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு த்ரில்லான அனுபவத்தை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    No comments: