Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 3, 2016

    ஆசிரியர் பதவி உயர்வு ஊதியம் நிர்ணயிப்பதில் கல்வித்துறை புது உத்தரவு.

    இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ.750வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது, ஊதியம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.


    சில உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாக ஊதியம் நிர்ணயிப்பதால் இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றப்படி உள்ளன. இந்த குழப்பத்திற்கு தற்போது தொடக்கக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளிதலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற்று,ஊதியம் நிர்ணயிக்கும்போது தனி ஊதியம் ரூ.750யையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.

    மேலும் தனி ஊதியத்தை ஆண்டு ஊதிய உயர்வு,அகவிலைப்படி,ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.2011ஜன., 1க்கு பின் தேர்வுநிலை பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன்3சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.தர ஊதியத்தில் மாற்ற செய்ய கூடாது. தொடர்ந்து தனி ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    No comments: