Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 5, 2016

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

    உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை.


    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. அதேபோன்று, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    உடனடியாக வெளியிட வேண்டும்: இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், "உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகிறது. அனைத்து விண்ணப்பங்களிலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அன்று முதல் சில நாள்கள் வரை ஆன்லைன் மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்றனர்.

    ஆசிரியர்களும் கோரிக்கை: தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:-

    தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாவதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. பொதுவாக அரசுத் தேர்வு முடிவுகள் வெளியானால் ஒரு வாரம் வரை சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் நாங்கள் விடுப்பு எடுக்க முடியாது.

    மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் வெளியூர் பயணங்களைத் திட்டமிட முடியாமல் தவித்து வருகின்றனர் எனவே பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார் அவர்.

    1 comment:

    Unknown said...

    Yes , ofcourse