Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 11, 2015

    ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

    சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
    இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.
    இதன்மூலம், பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வாங்கி, ஆன்லைனில் பூர்த்திசெய்ய முடியும். மேலும், சில பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25% ஒதுக்கீட்டு சேர்க்கை விண்ணப்பங்களுக்காக, கவுன்டர்கள், 2 நாட்களுக்கும் மேலாக திறந்திருக்கும்.
    இந்த புதிய நடைமுறையின் மூலமாக, பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தரப்பில் கூறுப்படுவதாவது: புதிய ஆன்லைன் முறையால், விண்ணப்ப நடைமுறைகளுக்காக, பள்ளியில் வந்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
    மேலும், இந்த புதிய நடைமுறை, பழைய முறையைவிட வெளிப்படையாக இருக்கிறது மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை போன்ற குறைபாடுகள் இதன்மூலம் களையப்பட முடியும். அதுமட்டுமின்றி, வெளியூர்களில், வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட, அட்மிஷனில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
    இதுதொடர்பாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது: விண்ணப்ப நடைமுறைகள், ஆன்லைன் முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், பணிகள் எளிதாகியுள்ளன. இதன்மூலம், தரவுகளை(data) எளிதாக டவுன்லோடு செய்து, அவற்றை சரிபார்க்க முடியும்.
    ஒரு குழந்தை சேர்க்கை பெற்றவுடன், அக்குழந்தையினுடைய அனைத்து விபரங்களையும், ஒரே கிளிக் செய்வதன் மூலமாக, பள்ளி registry -ல் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும். இதுதவிர, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கையையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த இந்த புதிய ஆன்லைன் முறை உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: