Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 16, 2015

    பல்கலை தேர்வு விதிகளை மீறி உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு கண்டிப்பு

    மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


    தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லுாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பல்கலை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

    பொதுவானது: இதில், தன்னாட்சி கல்லுாரிகள், தேர்வுக்குரிய கேள்வித்தாள், பாடத்திட்டங்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும். மற்ற கல்லுாரிகளில், பல்கலை சார்பில் தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வுக்கான பல்கலையின் விதிகள், அனைத்து கல்லுாரிகளுக்கும் பொதுவானது.

    அனைத்து கல்லுாரிகளிலும், இளநிலை பட்டப் படிப்புக்கு, ஆறு பருவங்கள்; முதுநிலைக்கு, நான்கு பருவங்கள் பின்பற்றப்படுகின்றன. அனைத்து கல்லுாரிகளிலும், தேர்வுகள் முடிந்து, மதிப்பெண் பட்டியல், பல்கலைக்கு வழங்கப்படும். அதை ஆய்வு செய்யும் பல்கலை தேர்வுத்துறை, மாணவர்களுக்கு, புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும். தொடர்ந்து, அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.

    பல்கலை விதிப்படி, ஒரு மாணவர், ஐந்து பருவங்களிலும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, ஆறாவது பருவத்தில், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தால், ஜூன் மாதத்தில், உடனடி தேர்வு நடத்தி, தேர்ச்சி சான்று வழங்கலாம். சமீபத்தில், சென்னை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள சில தன்னாட்சி கல்லுாரிகள் அளித்த, மதிப்பெண் பட்டியலை ஆய்வுசெய்த, சென்னை பல்கலை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த கல்லுாரிகளில், ஆறு பருவங்களிலும், பல பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, உடனடி தேர்வு நடத்தி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. விதிகளை மீறிய அந்த கல்லுாரிகளின் பிரதிநிதிகளை அழைத்து, சென்னை பல்கலை தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:

    * இறுதி ஆண்டு முதுநிலை, இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், இறுதி பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்திருந்தால், அப்பாடத்திற்கு மட்டுமே, உடனடி தேர்வு நடத்த வேண்டும்.
    * அந்த தேர்வு, ஆண்டுதோறும் ஜூன், ஜூலையில் மட்டுமே நடத்த வேண்டும்.
    * இந்த ஆண்டு முதல், அனைத்து தன்னாட்சி கல்லுாரிகளும், உடனடி தேர்வு குறித்த பல்கலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: