Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 6, 2015

    மது அருந்திய கரூர் மாணவனுக்குஅதிகாரிகள் குழு 'கவுன்சிலிங்'

    மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது. கரூர் பஸ் நிலையத்தில், 17 வயது பள்ளி மாணவன், பள்ளி சீருடையுடன் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், அந்த மாணவன் படம் வெளியானதால், மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
    இதுகுறித்து, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மாணவனின் எதிர்காலம் கருதி, அவனுக்கு கவுன்சிலிங் அளிக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச் செல்வி, நன்னடத்தை அலுவலர் கணேசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மஞ்சு, அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மாள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து, 'கவுன்சிலிங்' வழங்கினர். அவர்கள் அளித்த உத்தரவாதத்தின் பேரில், மாணவனை மீண்டும், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

    1 comment:

    VU2WDP said...

    இங்கு ஒரு மாணவன் மது போதையில் கல்லூரிக்கு வந்தான். அவனை வாட்சுமேன் உள்ளேவிடவில்லை ஆனால் அவன் கம்போண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துவிட்டான். வகுப்பு அறைக்குள் ஆசிரியர் அவனைவிடாமல் முதல்வர் அறைக்கு அனுப்பிவிட்டார். முதல்வர் கேட்டபோது என்னை வகுப்புக்குள் விடாவிட்டால் பிரச்னை செய்வேன் என்று கூறினான். உடனே முதல்வர் அவனின் தந்தைக்கு போன் செய்தார். அவன் தந்தை ஒரு கான்ச்டபுள். அவருடன் அவர் மகனைப்பற்றி முதல்வர் கூறியவுடன் அவரோ நான் யார் என்று தெர்யுமா என் மகனை உள்ளேவிடவில்லை என்றால் உங்களுக்குதான் பிரச்னை என்று
    கத்தியுள்ளார். உடனே முதல்வர் அந்த மாணவனை வகுப்புக்கு செல்ல அனுமதித்து விட்டார். வகுப்பு ஆசிரியர் நிலையை எண்ணி பாருங்கள். (இந்த மாணவன் கோட்டா முறையில் சேர்ந்தவர்)