Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 9, 2015

    தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்

    தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற  சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று (07.02.2015) நடைபெற்றது. மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் அவர்கள் தலைமை வகித்தார்.  மாநிலப் பொருளாளர் திரு. கே.கார்த்திகேசன் மற்றும் மாநில மகளிரணி  செயலாளர் திருமிகு.ஆர்.ஏஞ்சல்வீணா  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். சங்க செயல்பாடுகள் குறித்து   விழுப்புரம் மாவட்ட  செயலாளர் திரு.எம்.மரியம்பிரகாசம் விளக்கினார். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் திரு.ந.மகேசு வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவர் திரு.எஸ்.அருள்செல்வம் நன்றி தெரிவித்தார்.


    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
    1. 1000 ஆசிரியர்பயிற்றுநர்களைப் பள்ளிக்கு பட்டதாரிஆசிரியர்களாகப்  பணியிடமாறுதல்
         செய்யவேண்டும்.
    2  .FTA தொகையினை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
    3.  மூன்றாண்டு விதியினை இரத்து செய்வதுடன், பொதுகலந்தாய்வு நடத்த வேண்டும்.
    4. பணிநிரவல் மற்றும் தற்போது செய்துள்ள பணியிட மாறுதலை (Paper Transfer ) இரத்து
        செய்து  ஜுன் '2014ல் உள்ள நிலை தொடர வேண்டும்.
    5. CPS திட்டத்தில் உள்ள  MISSING CREDIT சரிசெய்ய வேண்டும்.
    6.  CPS திட்டத்தினை இரத்து செய்துவிட்டு, GPF முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    7. அரசாணை நிலை எண்:78,பள்ளிக்கல்வித்துறை,நாள்:18.03.2009னை முழுமையாக 
         நடை முறைப்படுத்த வேண்டும்.
    8. புதிதாக ஆசிரியர்பயிற்றநர்களை நியமனம் செய்து,காலிப்பணியிடங்களை  நிரப்பி, 
        பணிச்சுமையினை குறைக்க வேண்டும்.
    9.ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு பதவிஉயர்வு மூலம் மேற்பார்வையாளர் பதவி வழங்க 
       வேண்டும்.
    10. ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு கருவூலம்  வழியாக ஊதியம் வழங்க வேண்டும்.

    1 comment:

    Unknown said...

    thanks tnkalvi, try to post meeting photo.