பரமக்குடி கணபதி பி.எட்., கல்லூரியில் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர்.
கடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பி.எட்., என்பது ஆசிரியர்களாக மட்டுமே ஆகப்போகிறோம் என நினைத்து படிக்கிறீர்கள்.
நாம் வேலை வாய்ப்பிற்காக படிக்கிறோம். இதற்கு ஆங்கிலப் புலமை அவசியம். நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள், என்றார்.
No comments:
Post a Comment