Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 15, 2015

    பிளஸ் 2 விடைத்தாள் ஒன்று திருத்த ரூ. 20 வழங்க வலியுறுத்தல்

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் இரா. ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் மா. சக்திவேல், அமைப்புச் செயலர் வி.டி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ. தீனதயாளன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் உழைப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 2004 - 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ச. உமா நன்றி கூறினார்.

    No comments: