Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 17, 2015

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும் கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் தைக்கும் பணி மற்றும் வினாத் தாள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும் நடந்துள்ளன.
    இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    தமிழ் வழியில்..
    தமிழ் வழியில் பிளஸ் 2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர் தமிழ் வழியில் எழுதுகின்றனர்
    சிறையில்..
    இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை 77 சிறைவாசிகள் புழல் சிறையில் தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 130 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.
    இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    பிளஸ் 2 தேர்வு:
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரத்து 963 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
    இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், மாணவர்களை விட 61 ஆயிரத்து 558 மாணவிகள் அதிகளவில் தேர்வெழுதுகின்றனர்.
    10ம் வகுப்பு:
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது. இதற்காக 11 ஆயிரத்து 827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேரும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    பிளஸ் 2 தேர்வில் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 33,816 மாணவ, மாணவிகளும் தேர்வெழுதுகின்றனர்.
    வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதிலும், 12ம் தேர்விற்கு 4,000க்கும் மேற்பட்டவர்களும். 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 5,200க்கும் மேற்பட்டவர்களும் பறக்கும்படை உறுப்பினர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
    முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை
    சென்னை தேர்வு மையங்கள்
    சென்னையை பொறுத்தவரை 412 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்கள், 28 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 403 மாணவ, மாணவியர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பை பொறுத்தவரை சென்னையில் 578 பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரத்து 124 மாணவர்கள், 29 ஆயிரத்து 230 மாணவிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    No comments: