ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு குழு பேச்சுவார்த்தை நடத்த மறு தேதி அறிவிக்காததால் வரும் 16 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்படும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
12-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு நியமித்த குழுவுடன் சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது மனு மட்டுமே பெறப்பட்டதாகவும் மாலை 5 மணிக்குள் மறு தேதி அறிவிக்க வேண்டும் என்றும் 11 தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கப்படாததால் இரவு 7 மணிக்கு கூடிய சிஐடியு, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள்அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தன. பின்னர், வரும் 14ஆம் தேதி, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வரும் 16 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்படும் எனவும் 11 தொழிற்சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment