Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 8, 2016

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் வரும் ஆண்டிற்கு தகவல் திரட்டல்

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் வரும் கல்வி ஆண்டிற்கான திட்டமிடல் குறித்த தகவல் திரட்டும் பணிமனை நேற்று கடலுாரில் நடந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் 2017- 2018 ம் ஆண்டிற்கான திட்டமிடல் குறித்தும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல் பெறுவதற்கான கூட்டம் கடலுார் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 408 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலா ஒரு உதவி ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி விபரங்களை சேகரிக்கும் விதமாக கல்வி மேலாண்மை மற்றும் தகவல்கள் திரட்டுவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு, அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்து அளிப்பது குறித்து விளக்கப்பட்டது.பணிமனையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவக்கிவைத்தார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், பாலமுருகன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் முருகன், தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments: