Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 31, 2016

    15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்

    கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது. 

    ஒருங்கிணைக்க முடிவு:
    கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 15 ஆயிரம் பள்ளிகளை, 'IT@School' என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் களஞ்சிய இணையதளமான, 'விக்கிபீடியா'வை போல், 'ஸ்கூல் விக்கி' என்ற பெயரில் இணையதளம் ஏற்படுத்தி, அதில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கவும், மாணவர் - ஆசிரியர் இடையே, தகவல் பரிமாற்றத்துக்கு உதவவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும் நவ., 1ல், ஸ்கூல் விக்கி இணையதளம் தயாராகிவிடும். இதில், 15 ஆயிரம் பள்ளிகளில், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மலையாளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளி விபரங்கள், பின்னணி குறித்து மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பதிவேற்ற முடியும்.

    சிற்றிதழ்:
    பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    No comments: