Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 27, 2016

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களின் பட்டியலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக விவகாரமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    பயனாளிகள் :
    நாளைய கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு 2016 ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் தற்போது உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் இல்லாமல் 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கேட்டுள்ளன.

    No comments: