Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 27, 2016

    அரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ராமதாஸ்

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28) ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை சனிக்கிழமை(அக்.29) வருவதால், ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையே (அக்.25) ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இந்தக் கோரிக்கை தீவிரமடைந்தது.


    இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அந்த அரசாணையை மாலையே ரத்து செய்த அரசு, வழக்கம்போல் 31 -ஆம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய அரசாணையை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் நல்லதல்ல. அரசின் இந்தக் குளறுபடியால் அரசுப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. ஒருவேளை, சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதைச் சாத்தியமாக்குவதுதான் நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததைத் திரும்பப் பெறுவது முறை இல்லை. எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமையே வழங்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    No comments: