Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 20, 2016

    மகிழ்ச்சியாக வாழ கற்ற கல்வியை சரியாக பயன்படுத்த அறிவுரை!

    மகிழ்ச்சியாக வாழ, கற்ற கல்வியை சரியாக பயன்படுத்த வேண்டும், என, பட்டமளிப்பு விழாவில், திருவள்ளுவர் பல்கலைகழக பதிவாளர் அசோகன் பேசினார்.


    வேலூர் ஊரிசு கல்லூரியில், 32 வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் எழில் கிறிஸ்து தாஸ் தலைமை வகித்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அசோகன், 930 பேருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: 

    வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால், அது பூந்தோட்டமாகவும், மறைந்து போனால் போராட்டமாகவும் மாறி விடும். நாட்டில் அனைத்து வளங்கள் இருந்தும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது இல்லை. 

    நம்மில் பலர், கற்ற கல்வியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. மகிழ்ச்சியாக வாழ, கற்ற கல்வியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

    ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து மேம்படுத்திக் கொண்டால், சாதனையாளராக மாற முடிவும். இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் ஜெய செல்வதாஸ், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    No comments: