Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 14, 2016

    தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரோசய்யா பதவிக்காலம் முடிந்தது தமிழ்நாட்டின் கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்–மந்திரி கே.ரோசய்யா, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 31–ந்தேதி முதல் இருந்து வந்தார்.


    2014–ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட பல கவர்னர்கள் பதவி விலகினர். சிலர் பதவி விலகுமாறு வைக்கப்பட்டனர். ஆனால் ரோசய்யா, பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு மாதம் 30–ந்தேதி முடிந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படக்கூடும் என கருத்து நிலவி வந்தது. ஆனால் அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. பொறுப்பு கவர்னர் நியமனம் மாறாக தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. இதையடுத்து அவர் தமிழக பொறுப்பு கவர்னராக கடந்த மாதம் 2–ந்தேதி பதவி ஏற்றார். இதற்கிடையே முதல்– அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாகளை நிதி மந்திரி ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒதுக்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் முதல்–அமைச்சர் பதவியில் ஜெயலலிதா தொடருவார் எனவும் அவர் கூறி இருந்தார். விரைவில் புதிய கவர்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருவதால் தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய முழு நேர கவர்னர் நியமிப்பது அவசியம் என மத்திய அரசு கருதி, இதற்கான முடிவு எடுத்துள்ளது.  இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறுகையில், ‘‘தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னரை நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது’’ என்றன. எனவே எந்த நேரத்திலும் தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: