Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 15, 2016

    புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: 'குரூப் - 4' தேர்வு எதிரொலி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 4' தேர்வுக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், 10ம் வகுப்பு புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், இள நிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், நில அளவையர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 5,451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' எழுத்துத் தேர்வை, நவம்பர், 6ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
    தேர்வுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வில் வெற்றி பெற, குறைந்த பட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள, 10ம் வகுப்பு புத்தகத்தை படித்து, விண்ணப்ப தாரர்கள் தேர்ச்சி பெறலாம். தேர்வுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு, 10ம் வகுப்பு புத்தகங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாட நுால் கழக விற்பனை மையங்களில், தினமும் பல நுாறு பேர், 10ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதால், பாட நுால் கழகத்திலும், புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    No comments: