Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 10, 2016

    அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்

    அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது. சென்னையில், பட்டினப்பாக்கம், லாயிட்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா நகர், முகப்பேர் என பல்வேறு பகுதிகளில், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே போல், பிற மாவட்டங்களிலும், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன.


    இந்த குடியிருப்புகளை பெற விரும்பும் அரசு ஊழியர்கள், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். காலியாக இருக்கும் வீடுகள் எண்ணிக்கை, விண்ணப்பங்கள் வந்த நாள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்.
    ஆனால், சிபாரிசு பெற்றவர்களுக்கும், அரசு ஊழியர் அல்லாத நபர்களுக்கும் வீடுகள் ஒதுக்குவதாகவும், வேண்டுமென்றே விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முறைகேட்டை தடுக்க, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:முறைகேட்டை தடுக்க, புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாடகை குடியிருப்புகள் குறித்த அனைத்து விவரங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிக்க, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    விண்ணப்பங்கள் பதிவு, விண்ணப்பங்களை வரிசைபடுத்துதல், ஒதுக்கீடு, வீடு ஒப்படைப்பு போன்ற பணிகள், ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படும்.
    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    No comments: