Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 10, 2016

    எமிஸ் பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு

    'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை, மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


    தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) கடந்த, 2012-13ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. தற்போது, பள்ளி மாறிய மாணவர்கள் மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை
    அப்டேட் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், ஆசிரியர்களை பள்ளிக்கு வர வைத்து, இப்பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். சர்வர் கோளாறு, மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதில் உள்ள குளறுபடி உள்ளிட்டவற்றால், அப்பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 12ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதன் பின் சர்வரில் அப்டேட் செய்ய முடியாது. எனவே, பணிகளை முடிக்காத தலைமை ஆசிரியர்கள், நேரடியாக இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று, அப்பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, எச்சரிக்கை விடுத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பணிகளை முடிக்க முடியாமல் தவிக்கும் தலைமை ஆசிரியர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    No comments: