Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 5, 2015

    பெண் ஆசிரியர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளி முதல் நாள் ஈடுசெய் விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு TNPTF வேண்டுகோள்

    இந்தாண்டு தீபாவளி திருநாள் நவம்பர் 10 செவ்வாய்கிழமை வருகிறது. தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும்; அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூரில் வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீபாவளி முதல் நாள் பள்ளிக்கு சென்று அதன்பின் மாலையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கூட்;டம் நெரிசலான நேரத்தில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் தீபாவளிக்கு முதல் நாள் ஈடுசெய் விடுப்பை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது.
                தீபாவளி திருநாள் வருகிற செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்று ஒரு நாள்; தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பான்மை ஆசிரியர்கள் தமிழகத்தின் தென் பகுதியின் கடைக்கோடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஞாயிறு விடுமுறைக்காக தன் சொந்த மாவட்டங்களுக்கு சென்று பின் திங்கள்கிழமை பள்ளிக்கு திரும்ப வேண்டும். அதன் பின் தீபாவளி கொண்டாடுவதற்கு திங்கள்கிழமை மாலை தன் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பவேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும்பொழுது தீபாவளி அன்று கூட தங்கள் இல்லம் திரும்ப முடியாத நிலை ஏற்படும்.  பெண் ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் பணியாற்றும் கல்வித்துறையில் மாவட்ட கல்வி நிர்வாகம் தனக்குள்ள அதிகாரவரம்பை பயன்படுத்தி பிரிதொரு நாள் பணிசெய்து சமன் செய்யும் விதமாக ஈடுசெய் விடுப்பை அறிவிக்க வேண்டும். இதனால் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும் பயனடைவார்கள்.
                    தீபாவளி முதல் நாள் பயணம் பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதாக அமைவது கடினம். மேலும் பேருந்துகள கிடைப்பதும் எளிதல்ல. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.  ஈடுசெய் விடுமுறையோ அல்லது உள்ளூர் விடுமுறையோ அறிவிப்பது என்பது வழக்கத்தில் உள்ள நிலைதான். இதனால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்காது. இந்த விடுமுறை நாளை மற்றொரு வார விடுமுறை நாளில் பணியாற்றி சமன் செய்து கொள்ளலாம்.
                    எனவே பெண் ஆசிரியர்களின் நலன் கருதி  மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஈடுசெய் விடுப்போ அல்லது விதிமுறைக்கு உட்பட்ட உள்ளூர் விடுமுறையோ அறிவிக்க வேண்டும் என் எங்கள் மாவட்ட அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    No comments: