Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 26, 2015

    உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்

    பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நவ., 12 ல், வி.ஏ.ஓ., தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு தேர்வு எழுதும்போது, வயது உச்சவரம்பு நிர்ணயம் தேவையில்லை என உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இந்த தீர்ப்பு இதற்கு முந்தைய வி.ஏ.ஓ., தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    ஆனால், தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வயதுள்ள பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.தேனியை சேர்ந்த பட்டதாரிகள் கந்தசாமி, சாமிநாதன் கூறியதாவது: 

    தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவுக்கும், புதுப்பித்தலுக்கும் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் 57 வயது வரை, அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுதலாம். இதற்கு முந்தைய தேர்வுகளில் தமிழக அரசே இந்த அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு அனுமதி மறுப்பது வேதனையாக உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளின் சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வயது உச்சவரம்பு சலுகை அளிக்க வேண்டும், என தெரிவித்தனர்.

    No comments: