Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 27, 2015

    அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நேரடி நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல மையத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் எஸ். ராஜகுமார், கே. கருப்புசாமி, கே. ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 178 இணைப் பேராசிரியர்கள், 102 பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு, நவம்பர் 8 ஆம் தேதி பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

    இத்தகைய பணியிடங்களை நியமனம் செய்யும்போது, 75 சதவீத இடங்களை பதவி உயர்வின் மூலம் பூர்த்தி செய்யவேண்டும் என்றும், 25 சதவீத இடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவு உள்ளது. இதன்படி, பிஹெச்.டி.யுடன் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு இணைப் பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கலாம்.

    இத்தகைய தகுதிகள் இருந்தபோதும், 178 இணைப் பேராசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்ற நேரடி நியமனம் தொடர்பாக வேறொரு வழக்கில், பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

    இதையும் மீறி நேரடி நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது நியாயமற்றது. எனவே, பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நியமனம் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

    No comments: