Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 23, 2015

    நீடிக்கிறது காற்றழுத்த தாழ்வு 2 நாட்களுக்கு மழை உண்டு

    'வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, குமரி கடல் பகுதியில் நீடிப்பதால், தமிழகத்தில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. சற்று மழை ஓய்ந்து மீட்பு பணிகள் தொடரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.


    இந்நிலையில், 'இன்னும், இரு நாட்களுக்கு, தமிழகத்தில் கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, குமரி கடல் பகுதியில், அதே காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடித்து வருகிறது. இதனால், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது.

    நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூரில், 9 மற்றும் புதுச்சேரியில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த, இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன, மிக கன மழையும், உள் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

    சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; விட்டு விட்டு மழை பெய்யும்; சில இடங்களில் கன மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: