Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 13, 2015

    பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் பறவைகள் ஆர்வலர் பேச்சு

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயற்சி நடைபெற்றது.

    பயற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . பெண் மருத்துவர் பார்கவி முன்னிலை வகித்தார்.பறவைகள் ஆர்வலர் பிரசன்னா சிறப்புரை நிகழ்த்தும்போது,பறவைகள் பற்றியும்,அதன் நன்மைகள் பற்றியும் ,காடுகளில் அதிகமான மரங்கள் வளர்வதற்கு பறவைகள்தான் காரணம் என்பது பற்றியும்,மரம் நடும்போது பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் என்றும்,இருவாட்சி,கொக்கு,தையல்கார குருவி,மான் சிட்டு,தவிட்டுக் குருவி,மீன் கொத்தி,கிளி வகைகள்,மரங்கொத்தி போன்ற பறவைகளின் படங்களை காண்பித்தும்,அதன் குணங்களை தெரிந்து கொள்ள செய்தும் விளக்கி பேசினார்.மேலும் பேசுகையில், மனிதன் இல்லாமல் பறவைகள் வாழ முடியும்,ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது.எனவே பறவைகள் அழியாமல் பாதுகாக்க பழம் தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பேசினார்.நிகழ்ச்சியில் மாணவிகள் பரமேஸ்வரி, தனலெட்சுமி, சந்தியா, ராஜலெட்சுமி, கார்த்திகா, கிருத்திகா மாணவர்கள் ஜீவா, ரஞ்சித், ராஜேஷ் ஆகியோர் பறவைகள் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    No comments: