Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 10, 2015

    மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும், விவரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
    இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளிலும், ஆதார் எண்கள் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டது. பலமுறை ஆதார் எண் இல்லாத மாணவர்கள் பெயர் பட்டியல் மட்டுமே கேட்கப்பட்டதே தவிர, ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியத் தேவையாக இருப்பதால், கல்வித்துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை விடப்பட்டது.

    சிறப்பு முகாம்கள்:இதன் அடிப்படையில், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்து; தற்போது, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
    திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் நடந்தது.
    22 சிறப்பு குழுக்கள்:அதில் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே, ஒரு லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு தற்போது வரை ஆதார் எடுக்கப்படவில்லை. அதிலும், மெட்ரிக் பள்ளிகளில்தான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை. அதிக எண்ணிக்கையில் ஆதார் எண் இல்லாத பள்ளி மாணவர்களைக்கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டமும் முதன்மையாக உள்ளது.

    ஆதார் அட்டை வழங்குவதற்கு, 22 சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பான்மையான குழுக்களை பள்ளிகளுக்கு பயன்படுத்தி, ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; இம்மாத இறுதிக்குள் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு அட்டை வழங்கப்படும்.
    பள்ளி நிர்வாகத்தினரும் இந்நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: