Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 10, 2015

    தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

    தீபாவளிப் பண்டிகையையொட்டி, தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:



    தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும்போது சில இடங்களில் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு சேதங்கள் ஏற்படுகின்றன. சிறுவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. 

    எனவே, இதனைத் தடுக்க சிறியவர்களும், பெரியவர்களும் கவனமாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்ய வேண்டும் என்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
     பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டோ, உடலுக்கு அருகில் வைத்துக்கொண்டோ வெடிக்க வேண்டாம், ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதியில் மட்டுமே செலுத்த வேண்டும், பாட்டில்களில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளையும் அந்தத் துறை வழங்கியுள்ளது.
     தீப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாட அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: